இலங்கையில் பாரிய இயற்கை அனர்த்தம்: இதுவரை 18 பேர் பலி, பலரை காணவில்லை
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகி உடைந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலி, நெழுவ பிரதேசத்தில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதனால் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டிருந்தவர்களை மீட்பதற்காக பெல் 212 மற்றும் எம்.ஐ - 17 உலங்கு வானூர்திகள் பணியில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.