டிராக்டர்களுக்காக புதிய ‘ஆப்’ டாபே நிறுவனம் அறிமுகம்
சென்னை : டிராக்டர்ஸ் அண்டு பார்ம் எக்கியுப்மென்ட் நிறுவனமான, ‘டாபே’ ராஜஸ்தானில், டிராக்டர்கள் மற்றும் பண்ணை இயந்திரங்களை, விவசாயிகள் வாடகைக்கு எடுப்பதற்கு, ‘ஜே பார்ம் சர்வீசஸ்’ எனும் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மல்லிகா ஸ்ரீனிவசான் கூறியதாவது: விவசாயிகள், ‘ஜே பார்ம் சர்வீசஸ்’ எனும் மொபைல் ஆப்பை, பிளே ஸ்டோரில் இருந்து, இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலம், விவசாயிகள் மிக சுலபமாக, அருகில் உள்ள வாடகை நிலையங்கள் வாயிலாக, தங்களுக்கு தேவையான டிராக்டர்கள் உள்ளிட்ட இயந்திரங்களை, வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
மேலும், ராஜஸ்தானில், டிராக்டர் மற்றும் விவசாய பொருட்களை வாடகைக்கு விடும் நிலையங்களுடன் தொடர்பு கொண்டு, அறுவடைக்கு தேவையான இயந்திரங்களை விவசாயிகள் வாங்குவதற்கு, இந்த ஆப் பயன்படும். முதற்கட்டமாக, இந்த சேவையில், 450 வாடகை நிலையங்களில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இணைக்கப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.