சர்ச்சைக்குரிய ஞானசார தேரவிரை விரட்டி பிடிக்கும் பொலிஸார்!

PARIS TAMIL  PARIS TAMIL
சர்ச்சைக்குரிய ஞானசார தேரவிரை விரட்டி பிடிக்கும் பொலிஸார்!

 பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்வதற்கான விஷேட நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 
பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு செய்து அச்சுறுத்தல்  விடுத்த குற்றச்சாட்டுக்காக அவரை கைது செய்வதற்கு பொலிஸ் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனர்.
 
தற்போது அவரை கைது செய்வதற்காக பல பொலிஸ் குழுக்கள் களத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
பொலிஸார் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக புதுக்கடை நீதிமன்றத்தின் 4ம் இலக்க நீதிபதியினால் அவருக்கு வௌிநாடு செல்வதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
 
ஞானசார தேரருக்கு எதிராக கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கு திட்டமிடப்பட்ட குற்றப் பிரிவுக்கு ஆஜராகுமாறு அழைத்திருந்த போதிலும் அவர் ஆஜராகவில்லை என்று பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். 

மூலக்கதை