காஷ்மீரில் போலீஸ் முகாம் மீது குண்டுவீச்சு

தமிழ் முரசு  தமிழ் முரசு
காஷ்மீரில் போலீஸ் முகாம் மீது குண்டுவீச்சு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் போலீஸ் முகாமை குறிவைத்து தீவிரவாதிகள் வெடிகுண்டு வீசினர். இந்த சம்பவத்தில் பொதுமக்களில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

காஷ்மீரின் ஷோபியான் பகுதியில் உள்ள போலீஸ் முகாம் மீது நேற்று தீவிரவாதிகள் மறைந்திருந்து குண்டு வீசினர். அந்த குண்டு முகாமில் விழாமல் அருகேயுள்ள சாலையோரத்தில் விழுந்து வெடித்து சிதறியது.

இதில், அவ்வழியே நடந்து வந்த நபர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

சத்தம்கேட்டு ஓடிவந்த போலீசார் உடனடியாக அவரை அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

தப்பியோடிய தீவிரவாதிகளை தேடும் பணியில் போலீசார், பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். ராணுவ, போலீஸ் முகாம்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது.


.

மூலக்கதை