பூநகரியில் பாரிய சூரியசக்தி மின்திட்டம்!
பூநகரியில் 1040 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய சக்தி மற்றும் காற்றுவலு கலப்பு மின்திட்டம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திட்டத்தை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
அதற்கமைய வடக்கில் பூநகரிப் பகுதியில், 240 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின்திட்டமும், 800 மெகாவாட் திறன் கொண்ட சூரியசக்தி மின் திட்டமும் அமைக்கப்படவுள்ளன.
காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி திட்டங்களுக்குப் பொருத்தமான இடமாக, பூநகரியை நிலையான சக்தி அதிகார சபை அடையாளம் கண்டுள்ளது.
மூன்று கட்டங்களாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திட்டத்துக்காக 6000 ஹெக்ரெயர் காணிகள் பயன்படுத்தப்படும். இதற்கான கட்டுமானப் பணிகள் இரண்டு ஆண்டுகளில் முடிவடையும் என குறிப்பிடப்படுகின்றது.