கொழும்புக்கு இணையாக மாறவுள்ள யாழ்ப்பாணம்!

PARIS TAMIL  PARIS TAMIL
கொழும்புக்கு இணையாக மாறவுள்ள யாழ்ப்பாணம்!

 கொழும்புக்கு இணையாக பெருநகர அபிவிருத்தி மையமாக யாழ்ப்பாணத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

 
அதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பான கலந்துரையாடல் அமைச்சரின் தலைமையில் நேற்று நடைபெற்றுள்ளது. 
 
இந்த கலந்துரையாடலில் யாழ் மக்களின் சார்பிலான பிரதிநிதிகள், பல்வேறு அமைப்புக்கள சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். 
 
யாழ்ப்பாணத்தை பெருநகர அபிவிருத்தி பிரதேசமாக மாற்றியமைக்கும் செயற்றிட்டம் அடுத்த வருடத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்
 
மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை பெற்றுக் கொண்டு யாழ்ப்பாணத்தை பல்வேறு மூலோபாய நகரமாக அபிவிருத்தி செய்யவுள்ளதாக அமைச்சர் இதன் போது கூறியுள்ளார்.
 
நாட்டில் நிலவிய போர் காரணமாக யாழ்ப்பாண நகர அபிவிருத்திக்கு பாரிய தடைகள் ஏற்பட்டது. 1980ஆம் ஆண்டின் பின்னர் நகரத்தில் இயற்கை வளர்ச்சி முழுமையான தடைப்பட்டதென அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
மின்சக்தி, நீர் விநியோகம், போக்குவரத்து, தொழில்நுட்பம், தொழில் முயற்சி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு பெரு நகர அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை