திருமணத்திற்காக சமந்தா 3 மாத ஓய்வு

தினமலர்  தினமலர்
திருமணத்திற்காக சமந்தா 3 மாத ஓய்வு

தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிஸியாக இருக்கும் சமந்தாவிற்கும், தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவுக்கும் அக்டோபர் மாதம் காதல் திருமணம் நடைபெற இருக்கிறது. ஐதராபாத்தில் மிகப் பிரம்மாண்டமாக இந்து, கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற உள்ளது. அதனால், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் படப்பிடிப்பிற்கு ஓய்வு கொடுக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமந்தா தற்போது தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். திருமணத்திற்குப் பிறகும் நடிக்கும் முடிவில் தான் இருக்கிறார். அவர் கைவசம் தற்போது தெலுங்கில், “ராஜு காரி காதி 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். அதோடு ராம்சரண் ஜோடியாக ஒரு படத்திலும், சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்திலும் நடிக்க உள்ளார்.

தமிழில் விஜய்யுடன் ஒரு படம், சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் ஆகியவற்றில் நடிக்க உள்ளார். அநீதிக் கதைகள், இரும்புத் திரை ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய் படத்தில் நடிக்க அடுத்த மாதம் முதல் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். அதன் பின் செப்டம்பர் மாதத்திற்குள் அவர் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க வருவாரா, அல்லது அநீதிக் கதைகள், இரும்புத் திரை ஆகிய படங்களை முடித்துக் கொடுப்பாரா என்பது புரியாத புதிர்தான். அப்படியே நடிக்க வந்தாலும் மூன்று மாதத்திற்குள் நான்கு தமிழ்ப் படங்களில் நடித்து முடிக்க வாய்ப்பில்லை. ஏற்கெனவே, ஷுட்டிங் ஆரம்பித்த படங்களுக்கு சமந்தா முன்னுரிமை கொடுப்பாரா, அல்லது இனி ஆரம்பிக்கப் போகும் படங்களுக்கு முன்னுரிமை கொடுப்பாரா என்பதுதான் கேள்வியே.

மூலக்கதை