கையாளாகாத அரசு தான் தமிழகத்தில் இருக்கிறது.. ஓபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கையாளாகாத அரசு தான் தமிழகத்தில் இருக்கிறது.. ஓபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு !

விழுப்புரம்: கையாளாகாத அரசு தான் தமிழகத்தில் இருக்கிறது என்று மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் நடைபெற்று வரும் பொதுக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறியாதாவது: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசாணை பெற்று தந்த ஒரே தலைவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஆட்சியில் இருப்பவர்கள் மக்களுக்கு துரோகம் இழைக்கிறார்கள். குடிநீர் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து தமிழக அரசுக்கு எந்தக் கவலை இல்லை.

சசிகலா, தினகரன் குடும்பத்தை கட்சியை விட்டு நீக்கும் வரை தர்மயுத்தம் தொடரும். காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட பிரச்சனைகளில் திமுக எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மீண்டும் ஆட்சிக்கு வர திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை.

தனக்கு பின் இவர்தான் பொதுச் செயலாளர் என்று ஜெயலலிதா யாரையும் அவர் குறிப்பிடவில்லை. வரும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசுக்கு பாடமாக அமையும். கையாளாகாத அரசு தான் தமிழகத்தில் இருக்கிறது என்று மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்றார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மூலக்கதை