மருத்துவமனைக்குள் நுழைந்து தந்தையை தாக்கிய மகன்!

PARIS TAMIL  PARIS TAMIL
மருத்துவமனைக்குள் நுழைந்து தந்தையை தாக்கிய மகன்!

இச்சம்பவம்  நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தந்தையை மகன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் மகன் கைது செய்யப்பட்டு, மனநல காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளார். 
 
Grasse (Alpes-Maritimes) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மருத்துவமனையில் மதியம் 1 மணி அளவில், தனது 66 வயது தந்தை மருத்துவ ஓய்வில் இருக்கும் அறைக்குள் நுழைந்த 24 வயதுடைய மகன், சரமாரியாக தந்தையை தாக்கியுள்ளான். பல வெட்டுக்காயங்களுக்கு பின்னர் அவனது தந்தை உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்துக்குரிய காரணங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. பின்னர் மகன் கைதுசெய்யப்பட்டு, மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
விசாரணைகளில் குறித்த 24 வயது கொலையாளி மிக அமைதியான நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  66 வயதுடைய அவனது தந்தையாருக்கு பத்துக்கும் மேற்பட்ட தடவைகள் கத்தியால் குத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

மூலக்கதை