தமிழகத்தில் ஆணவப் படுகொலைகள் அதிகரிப்பு: நல்லக்கண்ணு குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்

சென்னை: தமிழகத்தில் ஆணவப் படுகொலைகள் அதிகரித்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் காட்ச்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு குற்றம்சாட்டியுள்ளார். ஆணவக் கொலைகளை தடுக்க தனி ஆணையம் அமைக்க வேண்டும் எனவும், ஆணவக் கொலைகளை தடுக்க வலியுறுத்தி சென்னையில் மே 27இல் மாநாடு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வியில் கூடுதல் நிதியை அரசு ஒதுக்க வேண்டும் என்றும் நல்லக்கண்ணு கோரிக்கை விடுத்துள்ளார்.ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து அவர் கூறியதாவது: யார்வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் என்ன கொள்கை இருக்கிறது என்று அவர் வினவியுள்ளார். மேலும் காவிரி,ஈழம் உள்ளிட்ட பிரச்சனைகளில் என்ன நிலைப்பாடு இருக்கிறது என்றும் நல்லக்கண்ணு கேள்வி எழுப்பியுள்ளார்.

மூலக்கதை