சுரங்க முறைகேடு வழக்கு: நிலக்கரி துறை முன்னாள் செயலாளருக்கு 2 ஆண்டு சிறை

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: நிலக்கரி துறை முன்னாள் செயலாளர் குப்தாவுக்கு 2 ஆண்டு சிறை தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் குப்தா உள்ளிட்ட 3 பேருக்கு 2 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது. 3 பேருக்கும் சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த வாரம் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் எச்.சி. குப்தா உட்பட 3 அதிகாரிகளை குற்றவாளிகளாக அறிவித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னதாக கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீட்டில் பெரும் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிந்து விசாரித்தது. மத்திய பிரதேச மாநிலத்தில் தனியார் நிறுவனத்திற்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கியதில் முன்னாள் நிலக்கரித்துறை செயலர் எச்.சி குப்தா, கூடுதல் செயலாளராக இருந்த குரோபா மற்றும் சுரங்க ஒதுக்கீடு இயக்குநர் சமாரியா ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிந்தது. டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் நீதிபதி பரத் பரசர் கடந்த வாரம் தீர்ப்பளித்தார். அதில் எச்.சி. குப்தா உட்பட 3 அதிகாரிகளும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் தண்டனை விவரத்தை நீதிபதிகள் வெளியிட்டனர். நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் குப்தா உள்ளிட்ட 3 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. நிலக்கரி ஊழல் வழக்கில், அரசு உயர் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை