ஆஸி.,யில் இந்தியர் மீது இனவெறி தாக்குதல்

தினமலர்  தினமலர்
ஆஸி.,யில் இந்தியர் மீது இனவெறி தாக்குதல்

சிட்னி: ஆஸ்திரேலியாவில் இந்திய டிரைவர் மீது, தம்பதியினர் கொலை வெறி தாக்குதல் நடத்தியதுடன் இனவெறியுடன் கடுமையாக திட்டியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் தாஸ்மேனியா மாகாணத்தில் சான்டி பே என்ற இடத்தில், கடந்த வெள்ளிக்கிழமை இந்தியர் டிரைவர் ஒருவர் ஓட்டிச்சென்ற வாடகை காரில் கணவன், மனைவி ஏறினர். அதில் அந்த பெண் தொடர்ந்து கார் கதவை திறந்தபடி இறந்தார்.

கதவை மூடும்படி பல முறை கூறியும் கேட்கவில்லை. பதிலுக்கு இந்திய டிரைவரை இனவெறி வார்த்தைகளால் திட்டினார். கணவனோ இந்திய டிரைவரை வெளியே இழுத்து போட்டு கடுமையாக தாக்கினார். இந்த சம்பவத்தை இந்திய டிரைவர் தன் மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் உதவியுடன் இந்திய டிரைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், இது குறித்து வழக்கு பதிவு செய்ய போலீசார் மறுத்து விட்டனர். சட்ட சிக்கல் வரும் என்பதால் எனது பெயரையும் வெளியிட முடியாது என அந்த டிரைவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

மூலக்கதை