ராஜிவ் நினைவு நாள் தலைவர்கள் மரியாதை

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991ம் ஆண்டு மே 21ம் தேதி தேர்தல் பிரசாரத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்தபோது குண்டுவெடிப்பில் பலியானார். அவரது 26வது நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. டெல்லி வீர்பூமியில் உள்ள அவரது நினைவிடத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரது நினைவிடத்தில் சர்வமதப் பிரார்த்தனையும் நடந்தது.

மூலக்கதை