மாலத்தீவு கப்பலை மீட்ட இந்திய கடற்படை

தினமலர்  தினமலர்

மாலத்தீவு : மாலுமிகள் உட்பட 6 பேருடன் மாயமான மாலத்தீவு கப்பலை இந்திய கடற்படை கண்டுபிடித்து கொடுத்தது.மாலத்தீவின் இரு தீவுகள் இடையே பயணம் செய்த அந்நாட்டை சேர்ந்த 'லேண்டிங் கிராப்ட்' ரக கப்பல் திடீரென மாயமானது. அதில் மாலுமிகள் உட்பட 6 பணியாளர்கள்இருந்தனர்.அதை கண்டுபிடிக்க இந்தியாவின் உதவியை மாலத்தீவு நாடியது.
இந்திய கடற்படை மாலேயில் இருந்து சுமார் 120 நாட்டிகல் மைல் தொலைவில் மரியா 3 கப்பலை இந்திய கடற்படையின் டோனியர் விமானம் கண்டு பிடித்தது அங்கிருந்து கொடுக்கப்பட்ட தகவலின்படி இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். கிர்ச் அங்கு சென்றது. அப்போது மாலத்தீவு கப்பலுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டது.பணியாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்திய கடற்படையின் பணியை மாலத்தீவு நாட்டுக்கான இந்திய துாதர் அகிலேஷ் மிஷ்ரா பாராட்டிஉள்ளார்.

மூலக்கதை