முத்தலாக்குக்கு தடை விதிக்க சட்டம் கொண்டு வர தயார்

தினகரன்  தினகரன்

பெங்களூரு: பெங்களூரு எம்.எஸ்.ராமையா மருத்துவமனை கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு மத்திய  அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியதாவது:  முத்தலாக்கை தடை செய்ய தேவைப்பட்டால் சட்டம் கொண்டு வர மத்திய அரசு தயாராக இருக்கிறது. ஆனால் இஸ்லாமியர்கள் தங்களுக்குள் உள்ள பிரச்னைகளை விவாதித்து ஒரு நல்ல முடிவுக்கு வர வேண்டும். ஆனால் முத்தலாக் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு  உறுதியாக உள்ளது. இந்துக்களை போன்று இஸ்லாமியர்களும் பல்வேறு சமூக கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அதேபோன்று முத்தலாக் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். முத்தலாக் முறை இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக உள்ளது. இது ஒரு பாலினத்தின் உரிமையை புறக்கணிக்கும் பிரச்னையாக இருப்பதால், பாலின நீதிக்கு முறையான நடவடிக்கை எடுக்க இஸ்லாமியர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

மூலக்கதை