பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்திய ஈரான்

தினமலர்  தினமலர்
பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்திய ஈரான்

டெஹ்ரான்: பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
ஈரான், பாகிஸ்தான் நாடுகள் 900 கி.மீ., எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. இந்த பகுதியில் பயங்கரவாதிகளை ஒடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தானி்ல செயல்படும் பயங்கரவாதிகள் ஈரான் எல்லை பாதுகாப்பு படையினர் 10க்கும் மேற்பட்டவர்களை கொன்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. பயங்கரவாதிகளை ஒடுக்க வேண்டும் என ஈரான் எச்சரித்திருந்தது.
இந்நிலையில், ஈரான் ராணுவத்தினர், பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகளை குறிவைத்து குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதனால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை