முடிவுக்கு வரும் பத்தாவது ஐபிஎல் தொடர்!

PARIS TAMIL  PARIS TAMIL
முடிவுக்கு வரும் பத்தாவது ஐபிஎல் தொடர்!

 இந்தியாவில் பத்தாவது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் லீக் போட்டிகள் முழுவதுமாக முடிந்த நிலையில், பிளே ஆப் சுற்றுகளுக்கு மும்பை, புனே, ஹைதராபாத், கொல்கத்தா அணிகள் தகுதி பெற்றன.

 
பிளே ஆப் சுற்றில் ஹைதராபாத், கொல்கத்தா அணிகள் வெளியேறின. இந்நிலையில் நாளை ஹைதராபாத்தில் நடக்கும் இறுதிப்போட்டியில், மும்பை அணி, புனே அணியை எதிர்கொள்கிறது.
 
இதில் மும்பை அணி, இரண்டு முறை ஏற்கனவே சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஐபிஎல் தொடரில் புனே அணி, முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
 
பத்தாவது ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் மூன்று முறை மோதியுள்ளன. மோதிய அனைத்து போட்டிகளிலும் புனே அணியே வென்றுள்ளது.
 
இதைத் தொடர்ந்து ஐபிஎல் வரலாற்றில் நான்காவது முறை இறுதிப்போட்டி முன்னேறியுள்ள மும்பை அணி, புனே அணியை வெல்லும் முனைப்புடன் உள்ளது.
 
அதே நேரத்தில் 7-வது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டியில் களமிறங்கும் டோனியின் அனுபவத்தை மும்பை அணி சமாளிப்பது கடினமான விஷயம் என்று கூறப்படுகிறது.

மூலக்கதை