பாகிஸ்தானில் இந்தியர் கைது

தினமலர்  தினமலர்
பாகிஸ்தானில் இந்தியர் கைது

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்தியர் ஒருவரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்ததாக கூறி கைது செய்துள்ள போலீசார், அவர் மீது வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 15 நாள் சிறையில் அடைத்துள்ளதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கைதான நபரை பற்றிய விபரம் ஏதும் வெளியாகவில்லை.இந்தியாவை சேர்ந்த குலபூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலும் ஒரு இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூலக்கதை