உலக சாதனை படைத்த பரிஸ் தீயணைப்பு படை வீரர்!!
நேற்று சனிக்கிழமை காலை, பரிசை சேர்ந்த தீயணைப்பு படை வீரர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.
30 நிமிடங்களில் 565 tractions கள் ( ஒரு உயரமான கம்பியில் இரு கைகளையும் பற்றிக்கொண்டு, இடைவிடாது மேலும் கீழும் கைகளால் ஏறி இறங்கவேண்டும்.) மேற்கொண்டு உலக சாதனை படைத்துள்ளார். தீயணைப்பு படை வீரர்களின் பயிற்சியில் இது கட்டாய பயிற்சி ஆகும். நேற்று சனிக்கிழமை காலை Hauts-de-Seine இன் Boulogne-Billancourt பகுதியில் இந்த உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. தீயணைப்பு படை வீரரான Mathieu Servan இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த போட்டியில் முன்னதாக 543 தடவைகள் செய்யப்பட்டிருந்தமை தான் உலக சாதனையாக இருந்தது. அதை முறியடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார் Mathieu Servan.
இவர் முன்னதாக கடந்த ஜனவரியில் மேற்கொண்ட சாதனை முயற்சி 521 தடவைகளுடன் தோல்வியில் முடிந்தது. மீண்டும் நேற்று சனிக்கிழமை இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.