காணாமல் போன மாலத்தீவு கப்பல் கண்டுபிடிப்பு

தினமலர்  தினமலர்
காணாமல் போன மாலத்தீவு கப்பல் கண்டுபிடிப்பு

புதுடில்லி: காணாமல் போன மாலத்தீவு கப்பலை இந்திய கடற்படை கப்பலும், விமானமும் கண்டுபிடித்துள்ளன.

மாலத்தீவு நாட்டில் ஏராளமான தீவுகள் உள்ளன. ஒரு தீவில் இருந்து மற்றொரு தீவுக்கு சரக்கு பொருட்கள், கனரக இயந்திரங்களை கொண்டுள்ள, 'லேண்டிங் கிராப்ட்' ரக கப்பலை மாலத்தீவு ராணுவம் பயன்படுத்தி வருகிறது. 'மரியா 3' என, பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பல் இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போனது. இந்த கப்பலை கண்டுபிடித்து தரும்படி, இந்திய கடற்படையிடம் மாலத்தீவு ராணுவம் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்., கிரீச் கப்பலும், டார்னியர் ரக விமானமும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுகடலில் தத்தளித்து கொண்டு இருந்த மாலத்தீவு கப்பலையும், அதில் பயணித்த ஆறு பேரையும் இந்திய கடற்படை கப்பல் கண்டுபிடித்து மீட்டுள்ளது. இந்த முயற்சியை மாலத்தீவுக்கான இந்திய தூதர் அகிலேஷ் மிஸ்ரா பாராட்டியுள்ளார்.

மூலக்கதை