Cannes திரைப்பட விழாவில் மர்ம பொதியால் பரபரப்பு! - அவசர வெளியேற்றம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
Cannes திரைப்பட விழாவில் மர்ம பொதியால் பரபரப்பு!  அவசர வெளியேற்றம்!!

நேற்று சனிக்கிழமை Cannes சர்வதேச திரைபட விழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் கலைஞர்கள் ரசிகர்களை அவசரமாக வெளியேற்றி தேடுதல் வேட்டை நடத்தினார்கள். 
 
கேன்ஸ் திரைப்பட விழா Cannes நகரில் கடந்த மே 17 ஆம் திகதி ஆரம்பித்து, பல்வேறு மொழி திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. இம்மாதம் 28 ஆம் திகதி வரை இடம்பெற உள்ள இத்திரைப்பட விழாவில், நேற்று சனிக்கிழமை நண்பகலுக்கு பின்னதாக சில நிமிடங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக வெளியேற்றம் செய்யப்பட்டது. காவல்துறையினர் தெரிவிக்கும் போது, திரையிடல் செய்யப்படும் அறைக்குள் அடையாளம் தெரியாத பொதி ஒன்று கிடைத்ததைத் தொடர்ந்து இந்த வெளியேற்றல் நடவடிக்கை இடம்பெற்றது என் குறிப்பிட்டுள்ளனர். 
 
மோப்ப நாய்கள், வெடிப்பொருட்கள் அகற்றும் படையினர் போன்றோர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு அப்பகுதி முழுவது. தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து சில நிமிடங்களின் பின்னர் நிகழ்வு வழமைக்குத் திரும்பியது. 
 

மூலக்கதை