பயங்கரவாதிகள் தாக்குதல் ஈராக்கில் 35 பேர் பலி

தினமலர்  தினமலர்


பாக்தாத், ஈராக்கில், இருவேறு இடங்களில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், 35 பேர் கொல்லப்பட்டனர்.
மேற்காசிய நாடான ஈராக்கில், பல பகுதிகளை, ஐ.எஸ்., பயங்கரவாதிகள், தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவர்களுக்கு எதிராக மற்ற நாடுகளின் துணையுடன், ஈராக் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், தலைநகர் பாக்தாத்தில் சோதனை சாவடி அருகே, காரில் வந்த, ஐ.எஸ்., தற்கொலைப்படை பயங்கரவாதி உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இதில், 24 பேர் உடல் சிதறி உயிரிழந்னர்; 20 பேர் காயமடைந்தனர்.
பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், அங்கிருந்த மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். இதேபோல், பாஸ்ரா நகரில் நடந்த மற்றொரு தற்கொலைப்படை தாக்குதலில், 11 பேர் கொல்லப்பட்டனர்; 30 பேர் காயமடைந்தனர். இந்த இரு
தாக்குதல்களுக்கும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

மூலக்கதை