இந்தோனேஷியாவில் நடுகடலில் கப்பல் தீப்பிடித்து 5 பேர் பலி

தினமலர்  தினமலர்
இந்தோனேஷியாவில் நடுகடலில் கப்பல் தீப்பிடித்து 5 பேர் பலி

ஜகார்தா: இந்தோனேஷியாவில் 192 பேருடன் சென்ற கப்பல் நடுக்கடலில் தீப்பிடித்ததில் 5 பேர் பலியாயினர். மீட்புபணிகள் நடக்கின்றன.
இந்தோனேஷியாவின் மாஸாலம்போ தீவில் இருந்து 192 பேருடன் கப்பல் கடந்த வெள்ளியன்று புறப்பட்டுச் சென்றது. ஜாவா தீவு நோக்கி சென்ற போது நேற்று (சனிக்கிழமை) நடுக்கடலில் திடீரென தீப்பிடித்தது. இதில் 5 பேர் பலியாயினர். கப்பல் தீப்பிடிப்பதையறிந்த பயணிகள் அலறியடித்து உயிரை காப்பாற்ற கடலில் குதித்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த தேசிய மீட்புபடையினர் கப்பலில் சிக்கியவர்களை மீட்டனர். எனினும் எத்தனை பேர் கடலில் குதித்தனர் என்பது தெரியவில்லை. தேடும் பணி நடக்கிறது.
மீட்புபடையைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், சரக்கினை கொண்டுசெல்லும் கப்பலுடன் ஆட்களையும் ஏற்றிச் செல்வது வழக்கமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

மூலக்கதை