Yvelines - ஒன்றுடன் ஒன்று மோதுப்பட்ட மகிழுந்துக்கள்! - கோர விபத்தில் மூவர் படுகாயம்!

PARIS TAMIL  PARIS TAMIL
Yvelines  ஒன்றுடன் ஒன்று மோதுப்பட்ட மகிழுந்துக்கள்!  கோர விபத்தில் மூவர் படுகாயம்!

இன்று சனிக்கிழமை காலை Yvelines மாவட்டத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளார். 
 
இன்று சனிக்கிழமை காலை 8 மணிக்கு Epône (Yvelines) பகுதியில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் ஐந்து மகிழுந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி பெரும் சேதம் விளைவித்துள்ளன. மேலும் விபத்தில் பெண் ஒருவர் மகிழுந்துக்குள் சிக்குண்டு உயிருக்கு போராடியுள்ளார். பின்னால் வந்த மகிழுந்தில் இருந்தவர்கள் குறித்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர். விபத்து  ஏற்பட்ட A13 சாலையின் இரு பகுதிகளிலும் நீண்ட நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு, காயமடைந்தவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவனையில் அனுமதித்தார்கள். விபத்து ஏற்பட்டதற்குரிய காரணங்கள் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. 
 
விபத்தில் மூவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை