ஆற்றில் மூழ்கி இரு இராணுவ வீரர்கள் பலி!!

PARIS TAMIL  PARIS TAMIL
ஆற்றில் மூழ்கி இரு இராணுவ வீரர்கள் பலி!!

இன்று வெள்ளிக்கிழமை இராணுவ பயிற்சியின் போது இரு இராணுவ வீரர்கள் ஆற்றில் மூழ்கி பலியாகியுள்ளதாக செய்திகள் 
தெரிவிக்கின்றன. 
 
பிரெஞ்சு இராணுவ வீரர்கள் இன்று Marne மாவட்டத்தில் இராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அதன் போது Marne ஆற்றில் மூழ்கி இரு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்துள்ள இரு இராணுவத்தினரும் Nîmes இன் Foreign Regiment of Infantry (REI)  படையைச் சேர்ந்தவர்கள் ஆவர். Marne ஆற்றில் படகில் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும், படகு கவிழ்ந்து இருவரும் ஆற்றுக்குள் மூழ்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 நிமிடங்களாக எவ்வித உதவியும் கிடைக்கப்பெறாமல் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
30 தீயணைப்பு படையினர், முதலுதவிப்படையினர் என சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. 
 

மூலக்கதை