காதல் மன்னனாக அதர்வா......

PARIS TAMIL  PARIS TAMIL
காதல் மன்னனாக அதர்வா......

 தமிழ் சினிமாவில் கடைசி வரை காதலை சொல்லாத நடிகர் என்று அழைக்கப்படுகிறவர் முரளி. அவரது மகன் அதர்வாவோ படத்துக்கு படம் காதலில் புகுந்து விளையாடுகிறார். அதுவும் அவர் தற்போது நடித்து வரும் ஜெமினி கணேசனும், சுருளி ராஜனும் படத்தில் காதல் மன்னாகவே நடிக்கிறார்.

 
கதைப்படி அதர்வா தான் ஜெமினி கணேசன். சூரி தான் சுருளிராஜன். அதர்வா ஜோடியாக ஜஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா, பிரணிதா, அதிதி போஹங்கர் நடிக்கிறார்கள். இவர்களுடன் நான் கடவுள் ராஜேந்திரன், மயில்சாமி, சோனியா, நடிக்கிறார்கள்.
 
ஒரே படத்தில் நான்கு ஹீரோயின் ஏன் என்றால் கலகலவென சிரிக்கிறார் அதர்வா. "அப்பா காலத்துல வந்த படங்களின் கதை வேறு இப்போதுள்ள கதை வேறு காதலும் வேறு. இது ஒரு ரொமாண்டிக் காமெடி படம். எல்லா மனிதனுக்கும் ஒரு தேடல் இருக்கும். படத்தில் எனக்கும் ஒரு தேடல் இருக்கு. அந்த தேடலில் நான், நான்கு பெண்களை சந்திக்கிறேன். அதான் நான்கு ஹீரோயின். அந்த தேடலில் குறுக்கே வந்து டிஸ்டர்ப் பண்ணுகிறவர் சுருளி ராஜன். தேடல் என்ன என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ். படத்தில் நான் ஹீரோ, இவர்கள் ஹீரோயின்னு யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. அவரவர்களுக்கு தனித்தனியாக விஷயங்கள் இருக்கிறது. எல்லோருமே கதையின் மாந்தர்கள் தான் என்கிறார் அதர்வா.
 
படத்திற்கு எம்.ஸ்ரீசரவணன் ஒளிப்பதிவு செய்கிறார், டி.இமான் இசை அமைக்கிறார். யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். ஓடம் இளவரசு இயக்குகிறார். அம்மா கிரியேஷன் சார்பில் டி.சிவா தயாரித்து முக்கிய கேரக்டரில் நடிக்கவும் செய்கிறார். அம்மா கிரியேஷனின் 25வது படம் இது.

மூலக்கதை