ஆதரவற்றத் தாய்மார்களுக்காக அமைப்பொன்றை உருவாக்கும் சுரேஷ் ரெய்னா

PARIS TAMIL  PARIS TAMIL
ஆதரவற்றத் தாய்மார்களுக்காக அமைப்பொன்றை உருவாக்கும் சுரேஷ் ரெய்னா

 இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, ஆதரவற்றத் தாய்மார்களுக்காக ஒரு அமைப்பை உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 
சுரேஷ் ரெய்னாவுக்கு க்ரேசிய ரெய்னா என்ற மகள் இருக்கிறார். அவரின் பிறந்தநாளையொட்டி இந்த அறிவிப்பை ரெய்னா வெளியிட்டுள்ளார்.
 
இது குறித்து பேசிய ரெய்னா, ஆதரவற்றத் தாய்மார்களுக்காக தொடங்கப் போகும் அமைப்பு என்பது எனக்கும் எனது மனைவிக்கும் தனிப்பட்ட முறையில் மிகவும் நெருக்கமானது.
 
அதுவும் எனது மகளின் பிறந்தநாளன்று இந்த அறிவிப்பை வெளியிடுவது மிகவும் சிறப்புக்குரியது. என் மனைவி இந்த அமைப்பை ஆரம்பிப்பதற்கு அதிக உழைப்பைச் செலுத்தியுள்ளார்.
 
அவரை நான் முழுவதுமாக ஆதரிக்கிறேன். இந்த அமைப்பின் மூலம் இந்தியாவெங்கும் இருக்கின்ற அம்மாக்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையில் ஒளிப்பாய்ச்ச முடியும் என்று நம்புகின்றோம் என்றும் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

மூலக்கதை