பப்புவா நியூகினியாவில் பயங்கரம்: 60 கைதிகள் சிறையை உடைத்து தப்பி ஓட்டம்
சிட்னி: பப்புவா நியூகினியா நாட்டில் லெய் நகரில் புய்மொ என்ற இடத்தில் சிறைச்சாலை உள்ளது. இங்கு கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பயங்கர குற்றங்களின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டு அடைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட கைதிகள் கடந்த வெள்ளியன்று சிறையை உடைத்துக் கொண்டு தப்பி ஓடினர்.
தப்பி ஓட முயன்ற கைதிகளை நோக்கி சிறை வார்டன் உள்ளிட்ட போலீசார் சுட்டனர். இதில் 17 கைதிகள் துப்பாக்கி குண்டுக்கு இலக்காகி பலியாயினர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி, தீவிர குற்றங்களில் சிக்கிய பல கைதிகள் தப்பியுள்ளனர். இதனால் பொது மக்களுக்கு மிகுந்த அபாயம் ஏற்பட்டுள்ளது.
போலீசார் சுட்டதில் 17 பேர் உயிரிழந்தனர். 3 பேர் பிடிபட்டனர்.
57 பேர் தலைமறைவாகினர்.
அவர்களை தேடி வருகிறோம் என்றார். ஏற்கனவே கடந்த ஆண்டு இதே சிறையில் இது போன்ற ஒரு சிறை உடைப்பு சம்பவத்தில் போலீசார் சுட்டதில் 12 கைதிகள் சுட்டு கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.